இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து தன் கிளைகளில் கனிந்திருக்கும் பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு…
-
-
13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை கைவிடுங்கள் இப்பழக்கத்தை என குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே நடந்துகொண்டிருக்கிறார்கள் 14 உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால் நீங்களிட்ட லட்சுமண ரேகை சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப் பொந்திடுவதோ…
-
இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன்…
-
ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை துயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு தூரமெனக் கேட்டேன்உன் கருவறை வாசலுக்கும்கல்லறைச் சுவருக்குமான தூரமெனஅசரீரி எழுகிறது யாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம் மிச்சமின்றி அப்படியேஇதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன் அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்காட்டித்தராமல் போயிருந்தால்கடைசிவரை துயரத்துக்குஎன்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும் நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது…
-
உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும்? 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல்பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள்…
-
நாம் வாழும் சூரிய மண்டலமும், இதில் உள்ள கோள்களும், நமது சூரிய மண்டலத்தைப் போன்ற லட்சக்கணக்கான சூரிய மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சமும் வியப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நமது பூமி ஒருநாள் அழிந்துவிடும். ஓஸோன் ஓட்டை விரிவடைந்து பூமி வெப்பமயமாகி, வறண்டுவிடும். சூரியனின் ஆற்றல் குறைந்து ஈர்ப்பு விசை வேறுபாடு காரணமாக நமது கோள்கள் அனைத்தும் சூரியனுடன் இணைந்து கருந்துளையாகிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். அதற்காகத்தான் மனிதர்கள் வாழக்கூடிய வகையிலான வேற்றுக் கிரகத்தை…
-
சிலந்தி வலை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சிலந்திவலைக் கூடாரம்? அமேஸான் காடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அலைந்து திரிந்து இந்த மிகச்சிறிய வெண்பட்டு வலைக் கூடாரத்தை கண்டுபிடித்திருக்கிறார் புகழ்பெற்ற வனவியல் நிபுணர் டொரெஸ் பில். சமீபத்தில் இவர் பெரு நாட்டுக்கு சென்றார். அங்கு பரவியுள்ள அமேஸான் காடுகளுக்குள் இவர் ஆய்வு நடத்தினார். அப்போது, ஒரு இலையில் இந்த மிகச்சிறிய வலைக்கூடாரம் இருப்பதை கண்டுபிடித்தார். பிரிட்டனில் ஆதி மனிதர்கள் மிகப்பெரிய கற்களால்…
-
உலகம் முழுவதும் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் சீழ் பிடிப்பதால் இறப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு, உலக அளவில் 4 கோடியே 90 லட்சம் பேருக்கு சீழ் பிடித்ததாகவும், இவர்களில் 1 கோடியே 10 லட்சம் பேர் மரணம் அடைந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. முன்னதாக ஒரு ஆய்வில் சீழ் பிடிப்பதால் 50 லட்சம் பேர் இறப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், அது தவறு என்று இந்த…
-
ஒரு துயரம்நம் வீட்டுப் படியேறும்போதுஎன்ன செய்வது? வாசலிலேயே ஆள்நிறுத்திவீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்வந்ததும் சொல்லிவிடுகிறேன்’என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம் கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்இந்தப் பூஞ்சை உடல்- இனியும்துயரம் தாங்காதென மருத்துவரளித்தபரிந்துரைச் சீட்டை நீட்டலாம்நமது டூப்பை முன்னே அனுப்பிஏமாறுகிறதாவென சோதிக்கலாம் அடையாளம் தெரியாதபடிக்குமரு வைத்துக்கொண்டு நழுவிவிடலாம்அப்பாய்ண்ட்மென்ட் இல்லாமல்சந்திப்பதில்லையென கெடுபிடி செய்யலாம்உன் கூகுள் வெரிஃபிகேஷன் கோட் என்னஎனக் கேட்டு டபாய்த்துப் பார்க்கலாம் விலாசம் மாறிவந்துவிட்டாயெனபக்கத்துத் தெருவுக்கு…








