எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள். அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான்…
அரசியல்
-
-
மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு தலைமையிலான அரசு நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்தது……… நில உடமையாளர்கள், அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள்………….. அந்த ஒரு சாதனையைக் காட்டியே, அதிலும் நில உடமையாளர்கள் தங்கள் நிலத்தை பறித்துக் கொள்வார்கள் என்று சொல்லியே இடதுமுன்னணி தொடர்ந்து ஐந்து முறை வென்றது……….. ஐந்தாவது முறையாக வென்ற சமயத்தில்தான் ஜோதிபாசு பிரதமராக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது………… மாநிலத்தில் 20 ஆண்டுகள் கூட்டணி அரசாங்கத்தை நிர்வகிக்கும்…
-
திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…
-
இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக. மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி…
-
(02-02-2019 அன்று நக்கீரனில் நான் எழுதிய கட்டுரை இது..) நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா…
-
கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுடன் நண்பர் பிரகாஷ் ராஜ்… இவருடைய கொலையைத் தொடர்ந்தே, மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார் பிரகாஷ் ராஜ். என்ன செய்யக் காத்திருக்கிறது காவித் தீவிரவாதம்?எதிர்க்கருத்துக்கு பதில் துப்பாக்கிக் குண்டுகளா? செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் முன் சுடப்பட்டு இறந்து கிடந்தார் கௌரி லங்கேஷ். ஹெல்மட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டு முன் நிற்பதையும், பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் கௌரி…
-
இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார். இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார். தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின்…
-
நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள்…
-
திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்… இப்போதும் பேசுகிறார்கள்… கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்… அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்… படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்… இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு…
-
கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு! இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியில் ஒரே வரிவிகிதம் என்பது இல்லை. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. அதாவது, 0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம் என்று வரிவிகிதங்கள் இருக்கின்றன. மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மாநிலங்களின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற…






