தனிநாயகம் அடிகளை தந்திரமாக ஏமாற்றி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை கைப்பற்றிய அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவ் புனிதம் திருச்செல்வம் மாநாட்டில் பெண்களுடன்
அரசியல்
-
-
திமுகவுக்காக உழைப்பவர்கள் அதிலும் எதையும் எதிர்பாராமல் உழைப்பவர்களால் மட்டுமே திமுக உயிர்த்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை மதிக்கிற நிர்வாகிகள்தான் குறைந்துகொண்டே போகிறார்கள். கட்சிக்காகவும் தலைவருக்காகவும் உயிரைத் தருகிற ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடன்பிறப்பு ஒருவரின் கஷ்டமான காலகட்டத்தில் கட்சிக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவருடைய மகன் Joel Jeyasekharan வருந்தி பதிவு இட்டிருந்தார். அந்தப் பதிவு முகநூலில் வைரல் ஆகியது. நாமும்கூட அதை உதயமுகம் இணையதளத்தில் பதிவு செய்தோம். இதையடுத்து…
-
தலைவர் எம்.கே.ஸ்டாலின் தேர்தலில் தோற்ற நாள் முதல் என் தந்தையும் தாயும் மகிழ்ச்சியாக இல்லை. என் அம்மா செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் ஜோசப் விஜய் என்ற பெயரைக் கேட்டதும், என் அப்பா மன அழுத்தத்தில் இருந்தார்; கோபத்தில் எங்கள் வீட்டு டிவியை உடைத்துவிடவும் செய்தார். அவரது பிறப்பிலிருந்து , என் தந்தை தனது வாழ்க்கையின் முக்கியமான காலத்தை கழகத்திற்காக உழைத்தவர். தேர்தல் பட்டியல் தயாரிப்பது முதல், வீடு வீடாகச்…
-
புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! ராதா மனோகர் (கனடா) வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை.. இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர். திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி. தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார். அது ஓரளவு பயனளித்தது…
-
எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள். அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான்…
-
மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு தலைமையிலான அரசு நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்தது……… நில உடமையாளர்கள், அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள்………….. அந்த ஒரு சாதனையைக் காட்டியே, அதிலும் நில உடமையாளர்கள் தங்கள் நிலத்தை பறித்துக் கொள்வார்கள் என்று சொல்லியே இடதுமுன்னணி தொடர்ந்து ஐந்து முறை வென்றது……….. ஐந்தாவது முறையாக வென்ற சமயத்தில்தான் ஜோதிபாசு பிரதமராக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது………… மாநிலத்தில் 20 ஆண்டுகள் கூட்டணி அரசாங்கத்தை நிர்வகிக்கும்…
-
திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…
-
இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக. மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி…
-
(02-02-2019 அன்று நக்கீரனில் நான் எழுதிய கட்டுரை இது..) நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா…
-
கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுடன் நண்பர் பிரகாஷ் ராஜ்… இவருடைய கொலையைத் தொடர்ந்தே, மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார் பிரகாஷ் ராஜ். என்ன செய்யக் காத்திருக்கிறது காவித் தீவிரவாதம்?எதிர்க்கருத்துக்கு பதில் துப்பாக்கிக் குண்டுகளா? செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் முன் சுடப்பட்டு இறந்து கிடந்தார் கௌரி லங்கேஷ். ஹெல்மட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டு முன் நிற்பதையும், பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் கௌரி…






