அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள் நாளுக்கு வணக்கம்! காற்றும் கடலும் கொந்தளித்தாலும் கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது பரந்த…
கவிதை
-
-
நெஞ்சின் ஆழத்தில் புதைந்த நினைவுகளின் நிழல்; சுழன்றடிக்கும் சூறாவளியாய் மனதினுள் வீசும் வலி. உன் பார்வை இதயத்தை எரிக்கிறது; வார்த்தைகளின் வெயிலில் உருகித்தான் போகிறேன் நான். மூச்சு சுடும் காதல் வலி கண்களின் வழியே கசியும்; சொல்ல முடியாத வரிகளாய் காதல் ரணங்கள். பிரிவு என்னும் வார்த்தையில் நின்று போன என் நிமிடங்கள்; என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து, மூச்சுத் திணறுகிறேன். நிசப்த இரவுகளில் தீண்டலின்றி தொட்டு விடும் நினைவுகள்;…
-
மொழிகளின் நாளில் ஆதி அந்தம் காணா எம் தாய் தமிழுக்கு சில வரிகள்… மொழிகள் மலர் தோட்டத்தில் மொழிகளின் மகரந்தமே… செம்மொழிகளின் கூட்டத்தில் மங்காத சூரியனே… இலக்கியங்களின் புகழில் உயர்ந்து நிற்கும் இமயமே… காலத்தின் கையெழுத்தில் கலையாத ஓவியமே… உள்ளங்களை உரமாக்கும் வாழ்வியல் நீரோடையே… வரலாற்றின் வள்ளலே சொற்களின் அரசியே… நாளும் இளமையாய் நடைபோடும் கன்னியே… உன் சொற்கள் காற்றில் மிதக்க உயிர் சுவைக்கும் அமிழ்தமாகுதே… தாய் தமிழே உன்…
-
விழி அம்பு உன் விழி அம்பால் காயப்பட்ட என் இதயம் இன்று ஆய்வறையில் அணுக்கருவை விட..! அதீத சக்தி வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு!
-
கொள்ளைக்காரி என்னில் எப்போதும் உன் நினைவுகள்தான் இரவில்கூட நிம்மதியாய் உறக்கமில்லை… கனவில்கூட உனது தொல்லை என் இதயத்தைத் தான் கொள்ளையடித்தாய் விட்டு விட்டேன் ஆனால் இன்றோ..? என் உறக்கத்தையும் கொள்ளை கொண்டுவிட்டாயே!
-
தமிழ்நாட்டின் தலைமகனார் சமத்துவம் சமூகநீதி கொண்டு சனாதன வேரில் வெந்நீர் பாய்ச்சியவர் ஆரிய நச்சில் உணர்விழந்த தமிழர்தனை கூர்முனை செற்களால் பகுத்தறிவு எடுத்து சுயமரியாதை ஊட்டி உணர்ச்சிப் பிழம்பாக்கியவர் வஞ்சனையால் கல்விமறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவுகண் திறக்க இடஒதுக்கீடு போராட்டம்எடுத்து அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியவர் ஆதிமொழியான தமிழ் வேதத்தில்சிக்குண்டு புராணகுப்பைகள் நிறைய காட்டுமிராண்டி மொழியென்று இடித்துரைத்து அறிவியல்வழி பயணிக்க சொன்னவர் தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் திருக்குறளை கிராமங்கள் தோறும்…
-
ஓ போலீசண்ணா ஓ போலீசண்ணா.. நாசா வந்துச்சு மிசா வந்துச்சு உன்னையும் ஜெயிலில் போட்டாங்க பொடா வந்துச்சு தடா வந்துச்சு என்னையும் ஜெயில்ல போட்டாங்க எனக்கு உனக்கும் வித்தியாசமில்லே ஓ போலிசாண்னா போராட்டம் தவிர வேற வழியில்லே ஓ போலீசண்ணா காய்கரிகள் வாங்கி வரவும் காரு ஸ்கூட்டர் தொடச்சுவிடவும் ஹா காய்கரிகள் வாங்கி வரவும் காரு ஸ்கூட்டர் தொடச்சுவிடவும் நாட்டுக்காக்க சேவ செய்ய வந்தே ஓ போலீசன்னா வீட்டுக்காக சேவை…
-
களைப்பு ஏன் என்று தெரியவில்லை அன்பே! உன் விரல் பற்றி ஓர் நாள் முழுவதும் நான் நடந்தாலும் என் கால்கள் ஏனோ… களைப்பை அறிவதில்லை!
-
நீ பேசாவிடில்.. நித்திரையில் இம்சையடி நீ… தினமும் நான் ரசிக்கும் கவிதையடி நீ… உன் இதழசைவில் உணர்ந்தேனடி என் தாய்மொழியின் இனிமையினை… மழலை மொழியும் கசக்குமடி எனக்கு… ஓர் நாள் நீ பேசாவிடில்…
-
தண்டனை.. நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்காதே… தண்டனையாக.. என்னை.. உன் இதயத்தில்.. சிறை வைத்துவிடு…






