தமிழகம் என்றுமே இந்தியாவில் தனித் தீவாக இருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எமெர்ஜென்சி காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்திராவை ஏற்றபோதும், முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மட்டும் உறுதியாக எதிர்த்து நின்றது. அப்போது, இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தனித் தீவாக இருக்கிறது என்று இந்திரா குறிப்பிட்டார். அதன்பிறகு, இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடும், கேரளாவும் மட்டும்…