Description
காஸ்ட்ரோவைப் பற்றிய புதிய பரிமாணத்தை இந்த நூல் தரும். அவரைப்பற்றிய புதிய தகவல்கள் நிச்சயமாக இதில் நிறைந்திருக்கிறது என்பதை உத்தரவாதப்படுத்த முடியும்.
இந்த நூலுக்காக நான் நிறைய விஷயங்களை தேடிச் சேர்த்திருக்கிறேன். அவை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
சேகுவேரா, காஸ்ட்ரோ உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் வாழ்க்கைக் கதை தமிழில் முழுமையாக, சுவாரஸ்யமாக தொகுக்கப் படவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதுகுறித்து, ‘ஜனசக்தி’ நாளிதழில் பணிபுரியும்போது, பொறுப்பாசிரியர் திரு. ராயப்பாவிடம் பேசியிருக்கிறேன்.
அவருக்கும் அந்த ஆதங்கம் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே, ‘காஸ்ட்ரோவைப் பற்றி தமிழில் வெளிவந்த நூல்கள் அனைத்தும் உள்ளன’ என்று அவர் கூறினார்.
எனவே, அந்தக் குறையைப் போக்கும் வகையில் அந்த மாபெரும் தலைவனின் எதார்த்தமான வாழ்க்கையை இயன்றவரை முழுமையாகப் பதிவு செய்ய முயற்சித்துள்ளேன்.
புரட்சி வெற்றிபெற்ற தொடக்க ஆண்டுகளில், புரட்சியைக் காப்பாற்ற, கியூபா மக்களை தயார்ப்படுத்தினார் காஸ்ட்ரோ. அதற்காக அவர் மூன்று ஆண்டுகளில் ஐந்து முக்கிய உரைகளை நிகழ்த்தினார்.
மிக நீண்ட அந்த உரைகளின் சாரம் (அந்த உரைகள் ஒவ்வொன்றுமே தனித்தனி நூலாக வெளியிடக் கூடியவை) இதுவரை தமிழில் வந்துள்ளனவா? என்று தெரியவில்லை. ஆனால், நான் இந்த நூலில் வீரம் செறிந்த அந்த உரைகளின் சாரத்தைப் பதிவு செய்துள்ளேன்.
இனி, நூலைப்பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
அன்புடன்,
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.