>தடைகளை உடைத்த முதல் பெண் ஆதனூர் சோழன் 1870களின் கடைசி ஆண்டுகளாக இருக்கும். சந்திரம்மாள் என்ற ஒரு 11 வயதுச் சிறுமியை தேவதாசியாக அர்ப்பணிக்கும் விழா நடந்தது. அர்ப்பணிக்கும் விழா என்பது, கோவிலுக்கு ஆடுகளையும் மாடுகளை நேர்ந்து விடுவதைப் போல, பெண்களை நேர்ந்துவிடுவதுதான். அதாவது, அந்தப் பெண்கள் பொதுச் சொத்தாக கருதப்படுவார்கள். திணவெடுத்த ஆண்களுக்கு உணவாக வேண்டும். அந்த விழாவில் அன்றைய புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய எஸ்.நாராயணசாமி…


