உடன்பிறப்பே, இந்துமதக் கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்குக் கோயிலே எங்கும் கிடையாது. எங்கேயாவது ஒரு கோயில் இருக்குமேயானால் அது அதிசயம்தான். சிவனுக்கு நாடெங்கும் ஆலயங்கள் உண்டு. விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் உண்டு. ஆனால் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிர்மதேவனுக்கு ஒரு ஆலயம் கூட இல்லாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா? நல்ல வேளை; சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவுக்குக் கோயில் இருந்து ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் பிரார்த்தனை நடத்துகிற பக்தர்களுக்குப் பிரதி உபகாரமாகப் பிள்ளைச் செல்வங்களை…


