ஹைபவர் கமிட்டி ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் ‘பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. “பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்“ – என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் படத்தோடு அல்ல) பெரிய பெரிய விளம்பரங்கள் வெளி வந்திருந்தன. சமூக சீர்த்திருத்தக்காரர்களும், ஆந்த்ரபாலஜீக்காரர்களும், ஸோஷியாலஜிஸ்ட்டுகளும், புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் ஜாதிக்காய் மலைத் தொடருக்கு…
-
-
1.உடல்+உள்ளம்+உலகம்+உயிர்=உன் இருப்பு மனித வாழ்வின் மர்மங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை. அதற்கு காரணம் அதுபற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே. அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்! இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.. பிறப்பு, இறப்பு, மறுபிறவி, உயிர், கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும்போதே மதங்கள் அவை பற்றி…
-
கோவைக்காய் மருந்து இருக்க பயமேன்? கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 7 முதல் 12 வரை உள்ள படைப்பு இது…
-
தொடங்கியது நிழல் நாடகம்! வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு எட்டாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள். ஏறக்குறைய ஐநூறில்…
-
தேங்காய்த் துண்டுகள் “மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே” என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 1 இருந்து 6 வரை உள்ள படைப்பு இது…
-
சளித்தொல்லையா? கருந்துளசி நல்லது! சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காச நோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு…
-
ஆற்றங்கரைப் பிள்ளையார் ஊழி காலத்திற்கு முன்… ‘கி.மு.’க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம். அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது. கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.****ஒரு கிழவர் வந்தார். பிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று. ‘சமூகம்‘ என்ற ஒரு மேடையைக்…
-
அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய்மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்திஉள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்திவீழ்ந்தெழுந்து வீரம்பேசிஇசையும் கலையும் எண்ணிவிளைத்துஇரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும்,வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின்அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில்புளியமரங்களில்புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில்பூமியை நகர்த்திபிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்தநவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும்புதுப்புதுக் கடவுளரைபடைத்துக்கொண்டே இருக்கட்டும்பொழுது புலர எழுந்துகாரியங்கள் மேற்செல்வோம்.














