நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடைபெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும் முழுமனதோடு பணியாற்றினர். அவர்களுக்கு…
கோபுரம் கழுவப்போன தீவட்டிகள்
-
-
புயலில் அடிபட்ட முல்லைக்கொடி புத்தூர் நம்பியின் தலைக்கு மேல் ஏராளமான கடமைகள் சுமத்தப்பட்டிருந்தன. பார்ப்பனர்களின் சகவாசத்தில் ஒரு கோவிலாக உருமாறி போயிருந்த நேமிநாதர் சமண பள்ளியை மீண்டும் நிர்மாணிப்பது முதல் கடமையாக இருந்தது. அது பற்றி உரியவர்களோடு பலவிதமான ஆலோசனைகளில் ஈடுபட்டான். சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்களை தேடிப்பிடித்து மீண்டும் சமண பள்ளிகளில் சேர்க்கவேண்டும். இடையில் வந்த கோவில் களியாட்டங்கள் அவர்களின் மனதை திசை திருப்பி இருக்க கூடாதே என்ற…
-
கண்ணீரை சுமந்து வந்த வெற்றி! பாலவோரை எங்கிலும் ஒரு சகிக்க முடியாத அமைதி குடி கொண்டிருந்தது. அரசன் நிலையோ என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் மக்களுக்கு என்ன தெளிவு கிடைக்கும்? மழை ஒய்ந்து விட்டது. கோவில் கட்டுமானம் வேலைகளை புறந்தள்ளி விட்டு ஏராளமான பணியாளர்கள் அரண்மனையை செப்பனிடும் அதிசய காட்சி அரங்கேறி கொண்டிருந்தது. பணியாட்கள் அரண்மனையை செப்பனிடுகிறார்களா அல்லது குப்புற கவிழ்க்கிறார்களா என்று ஊர் மக்கள் தமக்கு பேசிக் கொண்டனர்.…
-
கண்ணீருக்கு கவசம் போட்ட மழைநீர் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது குலதிலகன் மெதுவாக தனிமைப் படுத்தப்படுவதாக மேனகா பிராட்டிக்கு தோன்றியது. அவன் மிக வேகமாக தோற்று கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது. எதுவிதத்திலும் ஆலோசனை கூறமுடியாத ஒரு சூழ்நிலை கைதிகளாக அவனும் தானும் இருப்பதாக எண்ணினாள். அவளின் சுயநலத்தையும் மீறி ஒரு காதல் அவளுக்குள் பூத்திருந்தது. அரசனை பார்க்கும் போதெல்லாம் இப்போது கண்ணீர் விட்டாள். சுயநலத்தால் அவனை சதா தழுவிகொண்டிருந்த…
-
பெரு மழை கட்டியம் கூறிய போர் மழை புத்தூர் நம்பியின் அதீத அறிவிலும் ஆற்றலிலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருப்பது சரியானதா என்று சில வேளைகளில் அக்கையர் எண்ணுவது உண்டு. அதற்கு காரணமும் இருந்தது. காணமல் போன பார்ப்பனர்களின் விபரங்களை தேடி அயல் தேசத்து ஒற்றர்கள் உலாவ தொடங்கினர். இச்செய்தி அக்கையர் செவியில் எட்டியது. அயல்தேசங்கள் பார்ப்பனர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவது தங்கள் திட்டங்களை மேலும் சிக்கலாகும் என்ற கவலை…
-
எல்லை கிராமங்கள்… கைமாறும் பட்டயம் பாலாவோரையின் எல்லை கிராமங்களில் வழுக்கியாற்று பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. வழுக்கியாறு சீரமைக்கப் பட்டதும் வயல்களுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று போனதால் பல வாய்க்கால்கள் உருத்தெரியாமல் அழிந்து போயிருந்தன. அவற்றை செப்பனிட வேண்டிய தேவை இருந்தது. ஏற்கனவே பலதடவை குலதிலகனின் அரசவைக்கு முறை யிட்டும் அரசரோ, அவனது அமைச்சர்களோ எதுவித உருப்படி யான பணிகளுக்கும் செவி சாய்க்கவில்லை. இறுதியில் அங்கு…
-
தன் கை கொண்டே தன் கண்ணை..! புத்தூர் நம்பியின் முகாமில் ஏராளமான பணியாளர்கள் போர்கருவிகள் தயாரிப்பில் முழுவீச்சுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போர் கருவிகளின் அவசிய தேவை தற்போது இருப்பதாக நம்பியோ, பாக்கியத்தம்மாளோ கருதவில்லை. ஆனால், எதிர்கால அரசியல் சூழ்நிலைகள் எந்த திசையில் செல்லும் என்பதை எவராலும் எதிர்கூற முடியவில்லை. தற்போது பார்ப்பன சமய மேலாதிக்கம் அயலில் உள்ள பல தேசங்களிலும் பரவி வருகிறதே? எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்…
-
திராவிட தேசங்களை வென்ற செருக்கு! வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை. ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம் பார்க்கவென கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர்…
-
புத்திமான் பலவான்? புத்துவெட்டூர் நம்பி படுவேகமாக தனது நம்பிக்கைக்கு உரியவர்களை அழைத்து ஒரு ஆலோசனை குழுவை அமைத்தான். பேராவூருக்கும் பாலவோரைக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். ஏற்கனவே பாக்கியத்தம்மாளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விளக்கினான். பாக்கியத்தமாளின் புத்திசாலித்தனதால் தாங்கள் எதிரி என்று கருதக்கூடிய குலதிலகனின் நம்பிக்கையை பெற்று விட்டோம். அத்தோடு .பார்ப்பனர்களின் அசைவுகள் அத்தனையும் தங்கள் பார்வையிலேயே நடைபெறுகின்றன என்றும் புத்தூர் நம்பி கூறினான். மௌன யுத்தம் ஆரம்பம்.…
-
புத்தூர் நம்பியின் வரவு பாக்கியத்தம்மாளும் அவளது ஆலோசகர்களும் என்ன தான் நுணுக்கமாக திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே? தேசத்தை காப்பாற்ற தம்பியை பணயம் வைக்கவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கூட தூங்க அனுமதிக்கவில்லை. தாயும் தந்தையும் இறந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவளின் மனதளவில் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். சஞ்சலம் வரும்போதெல்லாம் மனதில் அவர்களிடமே கேள்விகளை…


