ஒவ்வொரு தேசங்களாக விழுந்து…! பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான். பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல் கோவிலாக வழுக்கியாற்றங்கரையில் ஒரு காவல் கோவில் அமைப்பதற்கு தீர்மானித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல குலதிலகனின் பார்ப்பன பரிவாரங்களின் உதவியையும் அதற்காக கோரி இருந்தாள். அவனது மனம் தாறு மாறாக கணக்கு போடத் தொடங்கியது. அப்படியே…
கோபுரம் கழுவப்போன தீவட்டிகள்
-
-
மேடைபோட்டு நாடகம் ஆரம்பம்! பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது. குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை நிறை வேற்றி கொண்டிருந்தனர். கோவில் கட்டுமான பணிகளுக்கு என புதிதாக வேற்று மொழிகள் பேசும் பணியாட்களும் சிற்பிகளும் வேற்று மதவாதிகளுமாக நகரே ஒரு வித விழாக்கோலம் கொண்டது போல ஆயிற்று. மாலைவேளைகளில் ஆடல் பாடல் வினோத நிகழ்சிகளை நகரின்…
-
வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள். அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது. தனது அடுத்த நகர்வுக்கு அது பெரும் உதவி செய்யும் என்று எண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும்…
-
நிமித்தகாரியின் வேட்டைக்களம்! குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள் “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை…
-
புதுவேஷம் போட்ட பார்ப்பனர்கள்! மிகுந்த மனவருத்தத்துடன் கொல்லா நோன்பை கடைப் பிடிக்க பார்ப்பனர்கள் முடிவு செய்தனர். ஆனாலும் இந்திரன் போன்ற தேவர்களை மகிழ்விக்க காலம் காலமாக செய்யப்படும் யாகங்களை செய்யவேண்டுமே? அதற்காக வேள்வியில் மிருகங்களை பலியிடுவதற்கு பதிலாக இரத்த சிவப்பு குங்குமத்தையும் பசு நெய்யையும், தர்ப்பை புல்லால் உருவத்தை செய்து அவற்றை எல்லாம் தீயில் இட்டு பொசுக்கி தங்கள் யாகத்தை செய்யலாம் என்று முடிவெடுத்தனர். மக்களின் ஞாபக மறதியில் நம்பிக்கை…
-
யாகவேள்வியும் சோமபானமும்! அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள். அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான திராவிட தேசமக்கள் மத்தியில் யாகங்களில் வழங்கப்படும் இறைச்சி கறியும்…
-
தொடங்கியது நிழல் நாடகம்! வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு எட்டாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள். ஏறக்குறைய ஐநூறில்…
-
துரோகமும் தியாகமும்! பாலாவோரை பாலாவோரை நகரத்தை சுற்றி உள்ள முப்பது கிராமத்திலும் இன்று மிகப்பெரும் கொண்டாட்டம். கூட்டான் குலதிலகன் பேராவூரன் கட்டிய பெருவரசு அய்யனார் கோவிலுக்கு இன்றுதான் கோபுரம் கழுவல் பெருந்திருவிழா. கட்டிய கோபுரத்தில் உள்ள மண் தூசி போன்றவற்றை குடம் குடமாக நீரூற்றி கழுவதலை குடமுழுக்கு என்று பொதுவாக கூறுவார்கள்.. முக்காலும் திரைகடலை அண்மித்த திராவிட தேசங்களின் கூட்டத்தில் பாலவோரை நகரம் அல்லது பாலாவோரை என்று அறியப்பட்ட தேசம்…
-
ஆரிய சதியை முறியடித்த அரசி சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது. அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு விளையாடிய ஆரியவாதிகளுக்கும் அந்த திராவிட ஊரின் அரசுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியை இது கூறுகிறது. இந்த ஆதிக்க அதிகார போட்டியில் சிக்கிய அரச குடும்பத்து உறவுகளும் அந்த மண்ணை நேசிக்கும் மக்களும் எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்து தங்கள்…





