அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய்மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்திஉள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்திவீழ்ந்தெழுந்து வீரம்பேசிஇசையும் கலையும் எண்ணிவிளைத்துஇரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும்,வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின்அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில்புளியமரங்களில்புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில்பூமியை நகர்த்திபிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்தநவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும்புதுப்புதுக் கடவுளரைபடைத்துக்கொண்டே இருக்கட்டும்பொழுது புலர எழுந்துகாரியங்கள் மேற்செல்வோம்.