கடலிலிருந்து வீசிய ஈரித்த குளிர் காற்று கரையில் மோதிய அலைகளது ஓசையின் சிந்தனை நிறைந்த இசையையும் கரையோரப் புதர்களின் சலசலப்பையும் ஸ்தெப்பி வெளியில் பரப்பியது. சில வேளைகளில் காற்றின் வீச்சுக்கள் சுருக்கம் விழுந்த மஞ்சள் இலைகளை வாரி வந்து நெருப்பில் போட்டுத் தழலை மூண்டெரியச் செய்தன. அப்போது எங்களைச் சூழ்ந்திருந்த இலையுதிர் கால இரவின் இருட்டு திடுக்கிட்டு, மிரட்சியுடன் நகர்ந்தது. இடப்புறம் எல்லையற்ற ஸ்தெப்பி வெளியும் வலப்புறம் எல்லையற்ற கடலும்…


