அன்புள்ள அரசியல் அரைவேக்காடே… சர்க்காரியா ஆணையத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அது அமைக்கப்பட்ட காலத்தின் அரசியலையும் கொஞ்சம் படியுங்கள்! 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதை ஏன் அறிவித்தார்கள் என்பதே தனிப் பெருங்கதை; அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். பத்திரிகைகளுக்குத் தணிக்கை. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது. கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு. மொத்தத்தில், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காலம் அது. அன்றைய சூழலை எதிர்த்து Times of India-ல் ஜனநாயகத்திற்கே…


