ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…


