அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி. இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை,…


