உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர். அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று. நவம்பர் 18 ஆம்தேதி காலையில்…


