“திமுக 75:இந்திய பன்முகத்தன்மையின் ஓர் அரசியல் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மத்தியில் பாஜகவுக்கு மகிழ்வளிக்க பத்திரிக்கையாளர்களும் பேராசிரியர்களும் உரைவீச்சுகளும் கட்டுரைகளும் பொழிவதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் திமுக, பெரியார் சார்பில் நடக்கிறது. பிம்ப கட்டமைப்புகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. “எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை தயார் செய்த…


