8000 சமணர்களின் கழுவேற்றம் பற்றிய தகவல்களை நம்மில் பலரும் அறிந்துள்ளோம்.ஆனால், சோழர்களின் பழைய தலைநகராக விளங்கிய பழையாறையில் சமணர்களின் பொதுப்பள்ளிக் கூடத்திலிருந்த 1000 சமணர்களை திருநாவுக்கரசர் வேண்டியபடி பல்லவ மன்னன் வேரோடு அழித்த செய்தியை அறிந்தவர்கள் மிகக் குறைவே. 1000 சமணர்கள் அழிவின் பிண்ணனி: திருமறைக்காட்டுத்(வேதாரண்யம்) தலத்தில் ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் இருந்தபோது, பாண்டிய நாட்டிலிருந்து ஞானசம்பந்தருக்கு அழைப்பு வந்தது. ஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்தார்,நாவுக்கரசுப் பெருமான்…


