ஏப்ரல் 29, 1932 தென் இந்தியர் வெளிநாடுகளில் குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதேவேளையில், வட இந்தியாவில் குடியேறி பிழைக்க வந்து அரசு அமைத்த அன்னியர்களுக்கு எதிராக ஒரு போர் தொடங்கியிருந்தது. 300 ஆண்டுகள் ஆட்சி செய்த குஷாணர்களின் வலிமை குன்றி, அந்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வந்து குடியேறிய சாகர், ஸிதியர், துருக்கியர் உள்ளிட்டோர் சிறு சிறு அரசுகளை ஆட்சி செய்தனர். இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவிலேயே வாழ…


