வரலாறுகளைப் வாசிக்கும் வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. வரலாறுகளை வாசிப்பது என்று இல்லாமல், பொதுவாக புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. வாட்ஸாப்பிலும், சமூக ஊடகங்களிலும் பரவும் இட்டுக்கட்டப்படும் தகவல்களே வரலாறுகளாக மாறும் கொடுமை அதிகரிக்கிறது. இந்நிலையில், நிஜமான வரலாறுகளை எளிமையாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். அப்படி ஒரு முயற்சிதான் எழுத்தாளரும் ஓவியருமான ஸ்ரீரசாவின் மானுடம் கண்ட மகத்தான புரட்சி என்ற நூல். மாபெரும் ரஷ்யப்…


