மக்ஸீம் கார்க்கியின் என்கிற நாவலில் ஒரு தாய் வருவாள். அவள் பெயர் பெலகெயா நீலவ்னா. குடிகாரப் புருஷனிடம் அடிவாங்குவதும், அவனுடைய முரட்டுத்தனமான இச்சையை தீர்ப்பதும் மட்டுமே அவளுடைய வாடிக்கையான கடமை. கணவன் ஒருநாள் இறந்துவிட்டான். அவளுடைய மகன் பாவெல் விலாஸவ். அன்றைய ரஷ்ய சமூக அமைப்பின்படி ஒரு மகன் எப்படி மாறுவதற்கு வாய்ப்புகள் மலிந்திருந்தனவோ, அந்தத் திசையில் அவனும் திரும்பினான். தந்தையின் மரணத்துக்கு பின், தந்தையைப் போலவே குடித்துவிட்டு…


