ராகுல் காந்தி பாராளுமன்ற அவை நீக்க செய்தி பல சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இது யதேச்சையானது அல்ல .எல்லா நாட்டிலும் உள்ளூர் அரசியல் உள்ளது. அங்கும் வலது /இடது என்ற ஊடக சார்பு உள்ளதுதான் இருந்தும் இந்த செய்தி பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. இந்த கவனத்திற்குப் பின் ஒரு துணுக்குறல் உள்ளது. இப்படி ஒரு நிகழ்வு பாகிஸ்தானில் நடக்கலாம், ஶ்ரீலங்காவில் நடக்கலாம், மலேசியாவில் நடக்கலாம் ஆனால்…