ஆடு பகை குட்டி உறவா என்று கிராமத்தில் சொல்வார்கள். யாரை மதிக்கனும் யாரிடம் அனுசரிச்சு போகனும் என்பதுகூட தெரியலைனா என்னா பண்றது? ஜெயிச்சதுல இருந்து திமுக தலைவரா, அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லைனு ஒருபக்கம் புலம்பல். தொண்டர்களையும் கட்சிக்காரர்களையும் தவிர யார்யாரையோ முதலமைச்சர் பாக்குறார்… #mkstalin #savukkushankar #athanurchozhan #seeman #rangarajpandey
-
-
புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்? “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே…
-
ஜாதி என்றைக்கு தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது…
-
தொடரும் தொடக்கம்! நமது அன்றாட வாழ்க்கை எளிதாக மாறுவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. தேவைகள் அடிப்படையில் மனிதன் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். காலங்காலமாக இவை படிப்படியாக நிகழ்ந்துள்ளன. மனித சமூகத்தின் முன்னேற்றம் கணிக்க முடியாத அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. ஒரு பகுதி மனிதனின் புதிய யோசனைகள் கடன் வாங்கப்பட்டு அல்லது காப்பியடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஒரு காலகட்டத்தில் ஆடம்பரமாக…
-
ஓர் இனத்தை, மொழியை அவ்வினத்தின் கலையை அரசியலை இன்னும் பற்பல விழுமியங்களை தலை நிமிர்த்திட காலம் அவ்வப்போது ஒரு தலைவனை தேர்வு செய்யும்… மாணவப் பருவத்திலேயே ஈரோட்டுக் கண்ணாடி அணிந்துகொண்டு காஞ்சித்தலைவன் கை பிடித்து வளர்ந்த கலைஞரையும் தமிழ் மண் அப்படித்தான் தேர்வு செய்தது… இளம் மாணவப் பருவத்திலேயே தான் பிரசவித்த மாணவ நேசன் இதழுக்காய் திறந்த அவரின் பேனா மூடி முரசொலியின் பல்லாயிரம் உடன்பிறப்பிற்கான கடிதங்களை தடம் பதித்து…
-
சாதிப் பின்புலம் இல்லை. பொருளாதார பின்புலம் இல்லை. தனது சொத்தாக அவர் கொண்டிருந்தது தமிழ்தான். தமிழால் தமிழர்களின் இதயங்களை வென்றவர் கலைஞர். 12 வயதில் தொடங்கிய அவருடைய தமிழ்பற்று, அவருடைய தமிழறிவை வளர்த்தது மட்டுமின்றி, தமிழர்களுக்கும் எளிய தமிழை அறிமுகப்படுத்தியது. “கோட்டான் குயிலுக்கு குரல் கற்றுக் கொடுத்ததாம்…!” “சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் திரிவதுபோல, எண்ணிக்கையிலே குறைந்த அந்தக் கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது… நிராயுதபாணிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின்…
-
மாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையா கருதினார். அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் 12 வயதில் மாணவநேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தப் பத்திரிகை வழியாக மாணவர் இயக்கத்தை தொடங்கியவர். பின்னர், கலைஞர் தனது 18 ஆவது வயதில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் 1942 ஆம்…
-
கலைஞர் திருவாரூர் பள்ளியில் படிக்கும்போது 1937 ஆம் ஆண்டு முதல்வரான ராஜாஜி கட்டாய இந்திக் கல்விக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். இதுதான் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம். அதிலேயே பள்ளி மாணவராக கலந்து கலந்துகொண்டார் கலைஞர். ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று வீதிகளில் கொடிபிடித்து முழக்கமிட்டவர். தனது இந்தி ஆசிரியரிடமே இந்தியை எதிர்த்து எழுதப்பட்ட துண்டு நோட்டிஸை கொடுத்தவர். சுமார்…
-
கலைஞருடைய மரணம், அவரைப் பற்றி இதுவரை பரப்பப்பட்ட அவதூறுகளை நம்பிப் பரப்பிவந்த இன்றைய தலைமுறையினருக்கு உண்மைகளை உரக்க உரைத்திருக்கிறது. மீடியாக்களில் வேலைசெய்யும் இளைஞர்களேகூட அவரைப்பற்றிய உண்மைகளை இப்போதுதான் படித்து செய்தியாக வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். அட, இவர் இவ்வளவு செய்திருக்கிறாரா என்பது இப்போதுதான் அவர்களுக்கே புரியத் தொடங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவருடைய நீண்டகால அரசியல் பயணcமும். அவர் கடந்து வந்த வேறுபட்ட சூழல்களில் வளர்ந்து வந்த தலைமுறைகள். இன்றைக்கும்கூட அவருடைய…
-
ஜூன் 3. தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அவரை விமர்சித்தவர்கள் கூட அவரிடம் பாராட்டிய அம்சங்கள் நிறைய. எழுத்தில் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுகிற அவரே பிடித்திருந்தால் மனம் திறந்து பாராட்டுவார். பிரபல வார இதழில் ‘நதிமூலம்’ என்கிற தொடரை ஆரம்பித்தபோது கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் சென்றிருந்தேன். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்து எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்து, தனிப்புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.…








