பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாறியபோதும் குறை சொன்னார்கள். பாரிமுனையை நோக்க மிகவும் தூரமாக உள்ளது, இணைப்புப் பேருந்துகள் சரியாக இல்லை, கோயம்பேடுக்குப் போவதே வெளி ஊர்களுக்குப் போவதுபோல் உள்ளது… என்றெல்லாம் விமர்- -சனங்களை முன்வைத்தார்கள். இப்போது, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாறும்போதும் அதே விமர்சனங்களை மீண்டும் வைக்கிறார்கள். இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு – பொறாமையினால் எதிர்மறை விமர்சனஙகளை வைப்பவர்கள் ஒருசாரார். உண்மையிலேயே இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டி, களைய வேண்டும்…
dmk
-
-
மரணமும் சுடுகாடும் தீட்டு என்பது ஆரியம். அவர்கள் இறந்ததும் சடலத்தை மண்ணில் கிடத்தி தீட்டைக்கழிக்க சடலத்தை எரிப்பார்கள். நெருப்பு அவர்களுக்கு தீட்டை எரித்து தூய்மையாக்கவல்ல அக்னி. அதன் நீட்சிதான் சுடுகாடுகள் தீட்டான இடங்களாயின. இறப்போடு தொடர்புடைய எல்லாமே தீட்டாயின. இறப்பின்போது சடலத்தை கையாளும் மனிதர்களும் தீண்டத்தகாதவர்களாயினர். அதன்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளும் “சாவுமோளங்கள்” ஆயின. அதற்கு எதிராக “மங்கள இசை” என்பதாக ஒன்று கட்டமைக்கப்பட்டது. மங்கலம் அமங்கலமென இசைக்கே தீட்டை ஏற்றியதன்…
-
செந்தில் பாலாஜியை ஏன் சுமக்க வேண்டும்? திமுகவில் பிடிஆர் தியாகராஜனுக்கு எந்த இடம்? இப்படியெல்லாம் சோமாஸ் என்கிற சமஸ் எழுதுகிறான். இன்றுவரை கலைஞரை கருணாநிதி என்று குறிப்பிடுவதை பெருமையாக கருதுகிறவன் இவன். ஆனால், முதலமைச்சரை எளிதில் நெருங்கும் வாய்ப்பு இவனுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் வியப்பான விஷயம். எல்லாம் உதயச்சந்திரன் உபயம் என்கிறார்கள். இந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். அதெல்லாம்…
-
ஜூன் 3. தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அவரை விமர்சித்தவர்கள் கூட அவரிடம் பாராட்டிய அம்சங்கள் நிறைய. எழுத்தில் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுகிற அவரே பிடித்திருந்தால் மனம் திறந்து பாராட்டுவார். பிரபல வார இதழில் ‘நதிமூலம்’ என்கிற தொடரை ஆரம்பித்தபோது கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் சென்றிருந்தேன். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்து எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்து, தனிப்புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.…
-
“இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும், கட்சிக்குள்ளும் நடக்கிற விஷயங்களை முதலமைச்சருக்கு உளவு சொல்லக்கூடிய அதிகாரிகளும்…
-
கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு துறையிலும் நிலவுகிற குழப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை இள்கே தருகிறோம். பள்ளிக்கல்வி இயக்குனரகம் என்று இருந்த பெயரை பள்ளிக்கல்வி கமிஷனரகம் என்று மாற்றியிருப்பதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது. பெயரிலேயே…
-
நல்லாதானே போய்க்கிட்டிருக்கு நிர்வாகம்… பிறகெப்படி நல்லாட்சிக் கனவு சிதையும் என்று இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறதா இல்லையா? அதுதான் இன்றைய நிலைமை. கொள்கை முடிவுகளை, சட்டத் திருத்தங்களை அமல்படுத்த முடியாத ஒரு அரசை நல்லரசு என்றோ, நல்ல நிர்வாகம் என்றோ எப்படி கூற முடியும் என்று அரசுத் துறையின் பல்வேறு தரப்பினர் புலம்புகிறார்கள். நல்ல ஆட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி, நல்ல முதல்வர் என்று எலைட் தரப்பினர் சமூக வலைத்தளங்களில் ஒரு…





