மரணமும் சுடுகாடும் தீட்டு என்பது ஆரியம். அவர்கள் இறந்ததும் சடலத்தை மண்ணில் கிடத்தி தீட்டைக்கழிக்க சடலத்தை எரிப்பார்கள். நெருப்பு அவர்களுக்கு தீட்டை எரித்து தூய்மையாக்கவல்ல அக்னி. அதன் நீட்சிதான் சுடுகாடுகள் தீட்டான இடங்களாயின. இறப்போடு தொடர்புடைய எல்லாமே தீட்டாயின. இறப்பின்போது சடலத்தை கையாளும் மனிதர்களும் தீண்டத்தகாதவர்களாயினர். அதன்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளும் “சாவுமோளங்கள்” ஆயின. அதற்கு எதிராக “மங்கள இசை” என்பதாக ஒன்று கட்டமைக்கப்பட்டது. மங்கலம் அமங்கலமென இசைக்கே தீட்டை ஏற்றியதன்…


