பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாறியபோதும் குறை சொன்னார்கள். பாரிமுனையை நோக்க மிகவும் தூரமாக உள்ளது, இணைப்புப் பேருந்துகள் சரியாக இல்லை, கோயம்பேடுக்குப் போவதே வெளி ஊர்களுக்குப் போவதுபோல் உள்ளது… என்றெல்லாம் விமர்- -சனங்களை முன்வைத்தார்கள். இப்போது, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாறும்போதும் அதே விமர்சனங்களை மீண்டும் வைக்கிறார்கள். இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு – பொறாமையினால் எதிர்மறை விமர்சனஙகளை வைப்பவர்கள் ஒருசாரார். உண்மையிலேயே இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டி, களைய வேண்டும்…


