பேரறிஞர் அண்ணாவின் மரணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது, நான் ஆதனூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது நல்வாய்ப்பாக நான்காம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வரை ஒன்றிய தலைநகரான அலங்காநல்லூரில் படித்தேன். அலங்காநல்லூர் பேரூராட்சி என்பதாலும், ஒன்றியத்தின் தலைநகர் என்பதாலும் முக்கியமான ஊராக இருந்தது. ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக உயர்நிலைப் பள்ளி பேரூராட்சிக்கு அலுவலகம், பேருந்து நிலையம், வாரச் சந்தை, எல்லாவற்றுக்கும்…


