மகளிர் பகுதி

முகத்தை பளபளக்க வைக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!!

ஆரஞ்சு பழ தோலை காயவைத்து அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்துமிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு  கடலைமாவு – 2 கப் சேர்த்துகலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவுபால் ஆடை சேர்த்து முகத்தில்  தடவி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், கண்ணுக்கு கீழ்உள்ள கருவளையம் மறையும்.

நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில்தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு  கூடும்.

பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும். தோல்மிருதுவாகவும், பளபளப்பாகவும்  இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லிஇலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவிவந்தால் தோல்  மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறஆரம்பிக்கும்.  

பாதாம் பருப்பை அரைத்து  தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும். உருளைக்கிழங்கு சாறுடன்  கடலைமாவையும்சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில்தேய்த்து வந்தால் முகப்பருக்கள்  மாயமாகிவிடும். செம்பருத்தி இலை,  பயத்தம் பயறுஇவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம்பளபளக்கும்.

அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும்பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
 தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *