மாமன்னன் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவரவர் பார்வையில் படத்தின் நிறைகுறைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டார்கள். எழுதியவர்கள் எல்லோருமே, திராவிட இயக்கங்களில் எல்லா நிர்வாகிகளுமே மனிதனை மதிக்காதவர்கள் என்பதுபோல சித்தரிக்கிறார்கள். திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி லட்சணம் இவ்வளவுதானா என்பதைப் போல கிண்டல் செய்கிறார்கள். பொது மேடைகளில் கால்களில் விழுந்தும், சாலைப் பயணங்களில் டயர்களை தொட்டும் கும்பிடும் குருசாமிகளை வளர்த்துவிட்டு செத்துப் போன எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும்…


