மதிப்பிற்குரிய த. உதயசந்திரன் இ.ஆ.ப., அவர்களுக்கு வணக்கம். புதுமையான, அறிவார்த்தமான உங்களது பணிகளைக் கண்டு வியந்து, குறிப்பாக மதுரை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நீங்கள் ஒழுங்கு செய்திருந்த முறைகளை நேரடியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்து பாராட்டி நின்ற புத்தக ஆர்வலர்களில் நானும் ஒருவன். பாடநூல் குழுத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றபின் பாட நூல்கள் அடைந்த மாற்றங்களை ஆசிரியப் பணியாற்றுகின்ற பல நண்பர்கள் பாராட்டிச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். குயிலியின் கற்பனைக் கதையால்…