வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.
ஆதனூர் சோழன்
-
-
நெய்யின் அளவற்ற பயன்கள்! பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல…
-
கோவைக்காய் மருந்து இருக்க பயமேன்? கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.…
-
தூக்கம் நன்று வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட்டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம்…
-
ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…
-
தாய்மை போற்றுதும்! “மனித இனத்தின் தொட்டில் இந்தியா. மனித மொழியின் பிறப்பிடம் இந்தியா. வரலாற்றின் தாய், வீரத்தின் பாட்டி, பாரம்பர்யத்தின் கொள்ளுப் பாட்டி இந்தியா.” -மார்க் ட்வைன் மேற்கத்திய் நாடுகளில் மனைவிதான் வீட்டை நிர்வகிக்கிறாள். இந்தியாவில் வீட்டைக் கட்டுப்படுத்துபவள் தாய். அங்கு பெண் என்பவள் மனைவி. இங்கோ, அவள் தாய். அவள், வீட்டின் கடவுளாக வழிபடப்படுகிறாள். மூன்று அதிசயங்களை அவள் நிகழ்த்துகிறாள். வலியையும் சந்தோஷத்தையும் அனுபவித்து அவள் குழந்தையை பெறுகிறாள்.…
-
நம்மைச் சுற்றிய பல்வேறு விஷயங்களை அறிந்திருப்போம். ஆனால் அவை குறித்த அறியாத விஷயங்களும் இருக்கும். அந்த விஷயங்கள் நமக்கு தெரிய வரும்போது வியப்பாய் இருக்கும். நமது பூமி குறித்த பல்வேறு அறியாத விஷயங்கள் இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொது அறிவியல், விண்வெளி அறிவியல், கோள்கள், பிரபஞ்சம் குறித்த ஏராளமான வியப்பூட்டும் உண்மைகளும் இதில் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைப் பற்றி நாம் அறியாத பல உண்மைகளையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து…





