மே 11, 1932 இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான். கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி…
இந்திரா
-
-
இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின் ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான். ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல.…


