உதயநிதி v/s விஜய்? பா.சரவணகாந்த் விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவருக்கு வரப்போவதில்லை. இருந்தாலும், அவருக்கு கிடைக்கும் வாக்கு தேர்தல் களத்தில் இருக்கிற யாருக்கோ சேதாரத்தை உண்டு பண்ண போகிறது என்பது நிச்சயம். அந்த அளவில் அவரும் களத்தில் இருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவரோ அல்லது அவரையோ அவருடைய ரசிக தற்குறிகளையோ உதயநிதி அளவுக்கோ. ஸ்டாலின் அளவுக்கோ ஒப்பிடும்…
உதயமுகம்
-
-
காவிரிப் பிரச்சனையின் நிஜ வரலாறு! ஆதனூர் சோழன் இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11…
-
1962ல் கலைஞருக்கு எதிராக நடந்த முதல் சதி! ஆதனூர் சோழன் திமுகவைத் தொடங்கிய அண்ணா தலைமையிலான ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் இல்லாத கலைஞர் திமுகவை சதி செய்து கைப்பற்றி விட்டார் என்று ஒரு குரூப் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. ஆனால், நெடுஞ்செழியனைக் காட்டிலும் மற்ற யாரைக் காட்டிலும் அண்ணாவிடமும், கட்சி தொண்டர்களிடமும் நெருக்கமாக இருந்தவர் கலைஞர்தான் என்பதே உண்மை. அண்ணாவின் கட்டளைகளை தனது வியூகத்தால் மிகப்பெரிய அளவில் ரீச்…
-
அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர். தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…
-
அண்ணா உருவாக்கிய கூட்டணி தந்திரம் ஆதனூர் சோழன் 1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142…
-
இன்னா+இனியவை நாற்பது இன்றைக்கும் பொருந்தும் பாடல்களின் எளிமையான உரை இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு தமிழ் இலக்கிய நூல்களுக்கு புதிய கோணத்தில் உரை எழுதலாமா என்று தென்கொரியாவில் பணிபுரியம் தமிழரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கேட்டார். நானும் நல்ல யோசனைதான் எழுதுங்கள் என்றேன். ஆனால், அந்த பாடல்கள் இந்தக் காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது என்பதையும் குறிப்பிட சொன்னேன். ஒரே சமயத்தில் துன்பம் தரக்கூடிய 164 செய்யக்கூடாத…
-
இந்த கரூர் கொடுமை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. நாம் அரசியல், திரைப்படம், திரையிசைப் பற்றி கருத்துகளைப் பகிரும்போது போலி கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று அமைதியாகவே இருக்கும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும், ரசிக்கும், கருத்து வைத்திருக்கும், ஆனால் வாயைத் திறக்காது. ஏனென்றால், இவையெல்லாம் அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை “பாவம்“ “அசுத்தம்“ “அருவருப்பு” “கர்த்தருக்கு எதிரானவை”. அந்தக் கருத்தை நான் விமர்சிப்பதுமில்லை, அவர்களுக்கு விளக்கம் சொல்லி மாற்ற முயற்சிப்பதுமில்லை.…
-
கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியானது வெறும் விபத்து அல்ல. திட்டமிடலின்மை, பொறுப்பற்ற தன்மை, மனிதாபிமானமின்மை ஆகிய வற்றின் கூட்டுப் பேரிடராகும் இது. இதில், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு. அரசியல் தலைவரின் முதல்பொறுப்பு: விஜய் தன்னை அரசியல் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர். அரசியல் தலைவரின் அடிப்படைக் கடமை மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான்.…
-
(உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்) கவிஞர் கருணானந்தம் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத பெயர். ஈரோட்டில் தந்தை பெரியாரின் அறிவாயுத தயாரிப்பு பட்டறையில் உருவான மற்றொரு ஆயுதம். அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துகளில் கலைஞரும் கருணானந்தமும் முக்கியமானவர்கள். கலைஞர் 1924ஆம் ஆண்டு பிறந்தவர். கருணானந்தம் 1925 அக்டோபர் மாதம் பிறந்தவர். ஆனால், கலைஞருக்கு முன்பே பெரியாரின் பட்டறையில் இணைந்தவர். அதற்கு காரணம் அண்ணா. இதெல்லாம் இருக்கட்டும்.…
-
“என்னால் மட்டும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளை தொடர முடிந்தால் எப்படி இருக்கும்?” கார்ல் மார்க்ஸின் கனவாக இது இருந்தது. அது கனவாகவே தொடர்ந்தது. அந்த அளவுக்கு அவரை வறுமை ரவுண்டுகட்டி அடித்துத் துவைத்தது. உலகை புரட்டிப் போட்ட ‘மூலதனம்‘ நூல் எழுதப்பட்ட சூல்நிலையை அறிந்தால், அது நிஜமாகவே ஒரு மனித விஞ்ஞானச் சாதனையாகும். 1848 ஆம் ஆண்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு…











