தாயாக நீ ஆக… இயற்கை தனது விளையாட்டு பொம்மைகளாய் உயிரினங்களைப் படைக்கிறது. உயிரினங்களில் மனித இனம் தனித்துவம் பெற்றது. மற்ற உயிரினங்களையும், இயற்கையையும் தனது ஆளுமைக்கு கொண்டுவரும் ஆற்றல் மனித இனத்துக்கு உண்டு. மனித இனத்தில்,ஆணும் பெண்ணும் இந்தப் பூமியில் பல அவதாரங்களை எடுக்கிறார்கள். இயற்கையின் படைப்பில் குழந்தைகளாய், இளைஞர்களாய், கணவன் மனைவியாய், தாய் தந்தையராய், தாத்தா பாட்டிகளாய் விதவிதமான அவதாரங்களை எடுக்கிறார்கள். இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணாம்சங்கள்…


