குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? அதற்கு என்ன செய்வது? பள்ளியோடும் பள்ளி நடவடிக்கைகளோடும் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பள்ளியை விட்டு வந்ததும், இன்று என்ன படித்தாய்? வீட்டுப்பாடம் என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்று விசாரிக்க வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் இயல்பாகவும் இருக்கும் போது, அவர்களது பள்ளி நடவடிக்கைகளை பாந்தமாக விசாரிக்க வேண்டும். பக்கத்தில் அமர்ந்திருக்கும் பையன் கிச்சுகிச்சு மூட்டியதில் இருந்து, கோபமாக திட்டியது வரையில்… ஆசிரியர் நடத்திய பாடத்தில்…


