ஒருவர் வாழ்க்கையில் முன்பு ஒன்றை ஏற்பதும், பிறகு அதையே விமர்சித்து நேரெதிர் நிலையை எடுப்பதும் ஏற்படுவதுதான். அதில் ஒன்றும் பிழையில்லை. பெரியாரே, சாமியாராக காசிக்குச் சென்று அங்கே துறவைத் துறந்தவர். காந்தியத்தை ஏற்றுத் துறந்தவர். வள்ளலார், கந்தக் கோட்டத்து சண்முகத் தெய்வமணியைப் பாடிவிட்டு, சிற்றம்பலத்தைப் பாடிவிட்டு பிறகுதான் தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரை விமர்சிக்கிற பக்குவத்தைப் பெறுகிறார். பெரியார் திருக்குறளை விமர்சித்தார். எல்லோரும் புகழ்வதால் அதை அவர் ஏற்கவில்லை.…