பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் இருந்து தான் வெளி வந்ததின் விளைவாக எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பெண் காணொளி வெளியிடுகிறார். காணொளியின் துவக்கத்தில் ‘நான் ஒரு பெரியாரிஸ்ட்’ என்றே துவங்குகிறார். அதை இன்னொரு பெண் பகிர்ந்து ‘இதனால் தான் பெரியார் ட்ரோல் செய்யப்படுகிறார்’ என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது. ஒருவருக்கு சரி என்று படும்…
பெரியார்
-
-
ஒருவர் வாழ்க்கையில் முன்பு ஒன்றை ஏற்பதும், பிறகு அதையே விமர்சித்து நேரெதிர் நிலையை எடுப்பதும் ஏற்படுவதுதான். அதில் ஒன்றும் பிழையில்லை. பெரியாரே, சாமியாராக காசிக்குச் சென்று அங்கே துறவைத் துறந்தவர். காந்தியத்தை ஏற்றுத் துறந்தவர். வள்ளலார், கந்தக் கோட்டத்து சண்முகத் தெய்வமணியைப் பாடிவிட்டு, சிற்றம்பலத்தைப் பாடிவிட்டு பிறகுதான் தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரை விமர்சிக்கிற பக்குவத்தைப் பெறுகிறார். பெரியார் திருக்குறளை விமர்சித்தார். எல்லோரும் புகழ்வதால் அதை அவர் ஏற்கவில்லை.…
-
பெரியாரின் திருமணத்தை கூறினால் மட்டும் அவதூறு கூறுவதாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நீங்கள் கூறும் பொழுது, நபியை அவதூறாக பேசும் பொழுது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா? எங்களுக்கு உரிமை இல்லையா?எனக் கேட்கும் பல இசுலாமியர்கள் உண்டு. பெரியார் என்றும் விமர்சனத்திற்கு பயந்தவர் அல்ல. பெரியாரிஸ்ட்களும் விமர்சனங்களுக்கு அச்சப்பட்டவர்கள் அல்ல, பெரியாரை விமர்சனம் செய்யும் பொழுது யாரும், யாரையும் வெட்டுவோம், குத்துவோம், கழுத்தை அறுப்போம் என கூறமாட்டார்கள். அப்படிச்…
-
திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…
-
தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொணர வேண்டும் என்று…
-
தமிழ்நாட்டின் தலைமகனார் சமத்துவம் சமூகநீதி கொண்டு சனாதன வேரில் வெந்நீர் பாய்ச்சியவர் ஆரிய நச்சில் உணர்விழந்த தமிழர்தனை கூர்முனை செற்களால் பகுத்தறிவு எடுத்து சுயமரியாதை ஊட்டி உணர்ச்சிப் பிழம்பாக்கியவர் வஞ்சனையால் கல்விமறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவுகண் திறக்க இடஒதுக்கீடு போராட்டம்எடுத்து அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியவர் ஆதிமொழியான தமிழ் வேதத்தில்சிக்குண்டு புராணகுப்பைகள் நிறைய காட்டுமிராண்டி மொழியென்று இடித்துரைத்து அறிவியல்வழி பயணிக்க சொன்னவர் தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் திருக்குறளை கிராமங்கள் தோறும்…
-
இன்று, எங்களது உள்ளூர் வாட்ச் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா? அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!! நியாமான கேள்விதான்!!! முதல் கேள்விக்கு ப் பதில்! பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்! அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல…








