பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் இருந்து தான் வெளி வந்ததின் விளைவாக எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பெண் காணொளி வெளியிடுகிறார். காணொளியின் துவக்கத்தில் ‘நான் ஒரு பெரியாரிஸ்ட்’ என்றே துவங்குகிறார். அதை இன்னொரு பெண் பகிர்ந்து ‘இதனால் தான் பெரியார் ட்ரோல் செய்யப்படுகிறார்’ என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது. ஒருவருக்கு சரி என்று படும்…
சுமதி விஜயகுமார்
-
-
இணைய தளத்தில், தலித்துகள் தனியாக வினையாற்ற வேண்டும் என்ற சர்ச்சைகள் அடங்கிய நேரம், வீட்டில் தலித்துகள் குறித்த பேச்சு எழுந்தது. ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்று தலித்துகளை குறித்து பேசிய நண்பர், தான் ஒரு ஒரு ஜாதி இந்து என வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்ற சொற்றொடரைஇதற்கு முன் பலமுறை கேட்டும், சிலமுறை நானும் பயன்படுத்தியுள்ளேன். அவை எல்லாம் பார்ப்பனர்களை குறித்து. …
-
யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு வரும் inland…
-
I Hate You. இதை தாண்டி சொல்ல வேறு எதுவும் இருக்கிறதா என்ன? என்னை பார்க்காதே, என்னிடம் பேசாதே, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளை விடவும் மிகவும் வலிமை நிறைந்த ஒரு சொற்றொடர். அதனாலேயே இதை நான் பயன்படுத்தியதே இல்லை. பல வருடங்களுக்கு முன்னர், ஓரிருவரை , அவர்கள் இறந்து போனால் கூட நன்றாக இருக்கும் என்று…
-
பெரியாரை ஆண்கள் விமர்சிப்பதை விட பெண்கள் விமர்சிப்பது மிக அவசிய தேவையாகவே எனக்கு தோன்றும். ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு என்பதை எல்லாம் தாண்டி பெரியாரின் பெண்ணியத்தை மீறிய ஒரு பெண்ணிய விடுதலை பேச்சை, இன்றளவிற்கும் கூட (இந்தியாவில்) வேறு யாரும் பேசி இருப்பதாக தெரியவில்லை. பேசுவதில்லையே தவிர, பல பெண்களும் பெரியாரின்பெண்ணிய கனவினை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெரியாரை படித்தவர்கள் இல்லை. பெரியாரை படித்த…



