விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று! மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார் சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை…


