அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள் நாளுக்கு வணக்கம்! காற்றும் கடலும் கொந்தளித்தாலும் கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது பரந்த…
சகாய டர்சியூஸ் கவிதைகள்
-
-
துயரம் சூழ்ந்த இந்நாளில், இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது, தொழில் துறையின் அரசர், ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார். உலகம் வணங்கும் மகாதலைவன், தொலைநோக்குப் பார்வையின் ஞானி அமைதி கொண்டான் என்ற செய்தி உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது. எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி, ஏழை எளியோர் நலனுக்காய் உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை, டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர், இந்தியாவின் பெருமைமிகு முகமானவர். நாட்டின் முன்னேற்றத்திற்காய் நாள்தோறும் கனவு…
-
விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று! மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார் சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை…
-
அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே! சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர் சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர் தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர் தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர் தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது …
-
விடியலின் மெல்லிய முத்தம் போல், ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி புனித நீரோடையின் ஆழ்கடலாகி அன்பின் காவியம் பாடுகிறது… அந்த கருமையான வானில் கருக்கலான சிலுவையில் அன்பின் சின்னம் தன் மக்களுக்காய் அவர்தம் பாவவிடுதலைக்காய் கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது… அவரின் கைகளையும் கால்களையும் துளைத்தன நீண்ட இரும்பாணிகள்… உமிழ்நீரும் கேலிகளுக்கும் வசவுகளும் கசையடிகளும் அரங்கேற அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்… …
-
காலம் சிதைத்த கனவுகள் என, வரலாறு கனிந்து கூறிடும். விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என, வேதங்கள் மெல்லப் பாடிடும். ஆராய்ந்து பார்க்கையில், துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்! உழைப்பின் சுரண்டல்கள் கண்டு முறித்துவிடாதே உன் மனதை, உன் திறமை உன்னை வழிநடத்தும். ஏமாற்றத்தின் நிழல் கண்டு முடக்கிவிடாதே திறமையை, காலத்தின் கற்பிதம் மனதில் கொள்! தடைகள் சூழ நின்றாலும் கண்ணீரின் ஆழத்தை கடந்து செல், கனவுகள் மெய்ப்படும். துரோகத்தின் வலிகள் …
-








