அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள் நாளுக்கு வணக்கம்! காற்றும் கடலும் கொந்தளித்தாலும் கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது பரந்த…


