தென்கொரியாவில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தஞ்சாவூர் தமிழருக்கு சிறந்த குடிமகன் விருது கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் டாக்டர் பிரபாகரன் மருத்துவத்தில் டி.எஸ்.பிஎச்.டி. முடித்தவர். தற்போது, தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணத்தில் உள்ள சுங்புக் மருத்துவக் கல்லூரியில் கதிரியக்க புற்றுநோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் (வாய்ஸ் ஃபிசிங்) சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க “சிறந்த குடிமகன் விருது” இவருக்கு கிடைத்துள்ளது.…