கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்!
ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை!
அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அவரது நண்பா நண்பிகளுடன் பயணம் போகிறாரா ?
இப்படி யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் ஏற்கனவே திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து தெறிச்சி ஓடியவர் இப்போது சென்னை ஏர்போர்ட்டிலிருந்து எங்கே செல்லப் போகிறார்? எதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்புகூட அறிவிக்கவில்லை? அரசுமுறைப் பயணத்தில் அப்படியென்ன ரகசியம்?


