மாமன்னன் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவரவர் பார்வையில் படத்தின் நிறைகுறைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டார்கள். எழுதியவர்கள் எல்லோருமே, திராவிட இயக்கங்களில் எல்லா நிர்வாகிகளுமே மனிதனை மதிக்காதவர்கள் என்பதுபோல சித்தரிக்கிறார்கள். திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி லட்சணம் இவ்வளவுதானா என்பதைப் போல கிண்டல் செய்கிறார்கள். பொது மேடைகளில் கால்களில் விழுந்தும், சாலைப் பயணங்களில் டயர்களை தொட்டும் கும்பிடும் குருசாமிகளை வளர்த்துவிட்டு செத்துப் போன எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும்…
கட்டுரைகள்
-
-
இன்று முதல் உனக்கு நல்லதே நடக்கும்! இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும். இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது. எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை…
-
மதப் பிரச்சாரகர்களின் காக்டெயில் பிரசாதம்! தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார தந்திரங்களை கொஞ்சம் நவீன மயப்படுத்தி உள்ளார்கள். ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள். இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான். டபிள் ஸ்ரீ, ஜக்கிவாசு போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு…
-
நம்மை சிந்திக்க விடாமல் நமக்காக சிந்திக்கும் வேறு யாரோ! சாமியார்கள், வழிகாட்டிகள், மகரிஷிகள், குருமகராஜிகள், பகவான்கள், பகவதிகள், அம்மா சாமியாரினிகள், எல்லோரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும். உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும்…
-
ரீமிக்ஸ் ஆன்மிக வியாபாரம் சமணம், பௌத்தம், மற்றும் ஏராளமான சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது. நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல்…
-
(ஒரு ஆண்டுக்கு முன்னே நாம் நல்ல நோக்கத்தோடு சொன்னோம்… யாரு கேக்குறா…) உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட்களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது,…
-
1807 பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி முதல் 1976 கலைஞர் ஆட்சி வரை இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா,…
-
சமீப நாட்களாக தேவதாசி என்ற வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம். தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை…
-
புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்? “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே…
-
ஜாதி என்றைக்கு தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது…








