ஒவ்வொரு தேசங்களாக விழுந்து…! பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான். பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல் கோவிலாக வழுக்கியாற்றங்கரையில் ஒரு காவல் கோவில் அமைப்பதற்கு தீர்மானித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல குலதிலகனின் பார்ப்பன பரிவாரங்களின் உதவியையும் அதற்காக கோரி இருந்தாள். அவனது மனம் தாறு மாறாக கணக்கு போடத் தொடங்கியது. அப்படியே…
ராதா மனோகர்
-
-
இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும் ஒரு திருட்டு புத்தி எப்போதும் ஒளிந்திருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது. அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம். இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள். அதில் வரும் ஒரு வசனம், ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும். அந்த ஆசையினால் அவர்…
-
மேடைபோட்டு நாடகம் ஆரம்பம்! பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது. குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை நிறை வேற்றி கொண்டிருந்தனர். கோவில் கட்டுமான பணிகளுக்கு என புதிதாக வேற்று மொழிகள் பேசும் பணியாட்களும் சிற்பிகளும் வேற்று மதவாதிகளுமாக நகரே ஒரு வித விழாக்கோலம் கொண்டது போல ஆயிற்று. மாலைவேளைகளில் ஆடல் பாடல் வினோத நிகழ்சிகளை நகரின்…
-
இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா? இறந்தவர்களோடு பேசமுடியுமா அல்லது அவர்களோடு தொடர்பு கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல. உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது நம்பிக்கைகள் வரலாற்றில் தாராளமாக உள்ளன. எந்த விடயத்தையும் மிகவும் தர்க்க ரீதியாக ஆராய்வதே ஒரு நேர்மையான ஆய்வாளனின் கடமையாகும். ஆய்வுகள் எப்பொழுதும் நேர்மையாக மேற்கொள்ளப் படுவதில்லை. பல சமயங்களில் அவை தங்களுக்கு சார்பான கருத்துக்களை நிறுவுவதற்கு செய்யப்படும் ஆய்வாகவே…
-
வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள். அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது. தனது அடுத்த நகர்வுக்கு அது பெரும் உதவி செய்யும் என்று எண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும்…
-
சாம்பார் கோட்பாடுகளுடன் கடவுள்! (God With Extra Fittings) நமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு நம்மோடு பிரிக்கவே முடியாதவாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை. இந்த கடவுள் நம்பிக்கை, தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை. கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கின்றன. இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளன. பல முரண்பாடுகள் நிறைந்த…
-
நிமித்தகாரியின் வேட்டைக்களம்! குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள் “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை…
-
3. பகுத்தறிவு ஆன்மிகம்-விஞ்ஞானக் கடவுள்! (Rational Spirituality) நாம் யார்? கடவுள் உண்டா? நம்மை சுற்றி நடப்பது என்ன? இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக கெட்டித்தனமான பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள். நமது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். நமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர் நாம்…
-
புதுவேஷம் போட்ட பார்ப்பனர்கள்! மிகுந்த மனவருத்தத்துடன் கொல்லா நோன்பை கடைப் பிடிக்க பார்ப்பனர்கள் முடிவு செய்தனர். ஆனாலும் இந்திரன் போன்ற தேவர்களை மகிழ்விக்க காலம் காலமாக செய்யப்படும் யாகங்களை செய்யவேண்டுமே? அதற்காக வேள்வியில் மிருகங்களை பலியிடுவதற்கு பதிலாக இரத்த சிவப்பு குங்குமத்தையும் பசு நெய்யையும், தர்ப்பை புல்லால் உருவத்தை செய்து அவற்றை எல்லாம் தீயில் இட்டு பொசுக்கி தங்கள் யாகத்தை செய்யலாம் என்று முடிவெடுத்தனர். மக்களின் ஞாபக மறதியில் நம்பிக்கை…
-
இயற்கை அழிவு நம் மனதில் தொடங்குமா? (Collective Consciousness… become Collective Unconsciousness. Then it will create material realities) தனி மனிதர்களுக்கு இருக்கும் மனநிலை அவர்கள் வாழ்வை தீர்மானிக்கும் என்பதைப் பற்றி பலமுறை எழுதி உள்ளேன். அவற்றைப் பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளா விட்டலும் அதுதான் உண்மை. பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம்…





