கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…


