மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார்.
அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின் உதவியை எதிர்பார்த்துதான் சிங்கம் இருக்கிறதா? என்ற குழப்பத்துக்கெல்லாம் அவர் விளக்கம் அளிக்கவில்லை.
மாற்று அரசியல் சக்தியாக தங்களை உருவகிக்கும் இவர்கள் பேச்சில் நாகரிகம் இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயம்.


