கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியானது வெறும் விபத்து அல்ல. திட்டமிடலின்மை, பொறுப்பற்ற தன்மை, மனிதாபிமானமின்மை ஆகிய வற்றின் கூட்டுப் பேரிடராகும் இது. இதில், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு. அரசியல் தலைவரின் முதல்பொறுப்பு: விஜய் தன்னை அரசியல் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர். அரசியல் தலைவரின் அடிப்படைக் கடமை மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான்.…
-
-
(உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்) கவிஞர் கருணானந்தம் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத பெயர். ஈரோட்டில் தந்தை பெரியாரின் அறிவாயுத தயாரிப்பு பட்டறையில் உருவான மற்றொரு ஆயுதம். அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துகளில் கலைஞரும் கருணானந்தமும் முக்கியமானவர்கள். கலைஞர் 1924ஆம் ஆண்டு பிறந்தவர். கருணானந்தம் 1925 அக்டோபர் மாதம் பிறந்தவர். ஆனால், கலைஞருக்கு முன்பே பெரியாரின் பட்டறையில் இணைந்தவர். அதற்கு காரணம் அண்ணா. இதெல்லாம் இருக்கட்டும்.…
-
வன்மத்திற்கும் வதந்திக்கும் இடையிலான ஆபத்தான கூட்டணி… தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நச்சு விளையாட்டு! “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற நம் முன்னோர்களின் பழமொழி இன்று சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இந்த பழமொழிக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்ந்துள்ளது: “வன்மம் கொண்டவனுக்கு வதந்தியே துணை!” தமிழ்நாட்டின் அரசியல் சூழலை நோக்கினால், அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களிடமும் ஒரு ஆபத்தான போக்கு வளர்ந்து வருவதை…
-
தென் கொரியாவில் உள்ள தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகளாவிய அளவில் முதல் திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டை ஒட்டி, பல்வேறு தலைப்புகளில் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும், கவிதைகளையும் இந்த அமைப்பு வரவேற்கிறது. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ஒரு லட்சம் கொரியா வொன் பரிசாக வழங்கப்படும். மாநாடு குறித்தும், அனுப்ப வேண்டிய கட்டுரைகள் குறித்தும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை… நாள்: நவம்பர் 8, 2025 நேரம்: மதியம் 12.30…
-
“என்னால் மட்டும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளை தொடர முடிந்தால் எப்படி இருக்கும்?” கார்ல் மார்க்ஸின் கனவாக இது இருந்தது. அது கனவாகவே தொடர்ந்தது. அந்த அளவுக்கு அவரை வறுமை ரவுண்டுகட்டி அடித்துத் துவைத்தது. உலகை புரட்டிப் போட்ட ‘மூலதனம்‘ நூல் எழுதப்பட்ட சூல்நிலையை அறிந்தால், அது நிஜமாகவே ஒரு மனித விஞ்ஞானச் சாதனையாகும். 1848 ஆம் ஆண்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு…
-
கற்பித்து ஒன்றுசேர்த்து புரட்சி செய் என்ற முழக்கத்தை தனது மக்களுக்கு கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். கற்றறிந்த மேதையைத் தலைவராக பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள், அவரை தங்கள் முன்னோடியாகவும், தலைவராகவும், கொண்டிருப்பது தவறே இல்லை. கல்வி பெற்றால் அதிகாரமும், பொருளாதாரமும் வந்து சேரும். சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று தந்தை பெரியார் கூறினார். இரண்டு தலைவர்களும் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். இருவரில் தந்தை பெரியார் பணம் படைத்தவர். கல்வியிலும் சாதி…
-
தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்ட, பெண்களின் நலனுக்காக சட்டப் பாதுகாப்பு வழங்கிய கலை, இலக்கியத்தில் குறிப்பிட்த்தக்க தொண்டாற்றிய கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடமில்லை என்று தமிழக அரசு மறுத்தபோது தமிழகம் நிஜமாகவே கொந்தளித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவுக்கு எம்ஜியார் சமாதியில் இடம் கொடுத்த அரசு, தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்தில் வேறு யாருமில்லாத…
-
தந்தை பெரியாருக்கு திருமணம் ஆனபிறகும் அவரை அவருடைய தந்தை அடித்தார். பெரியார் கோபித்துக் கொண்டு ஊர் சுற்றினார். காசி வரை போய் திரும்பினார். ஆனால், அவர் அணிந்திருந்த நகைகளை பத்திரமாக தந்தையிடம் ஒப்படைத்தார். கிட்டத்தட்ட ஒரு பிச்சாண்டியைப் போல ஞானத்தை தேடி அலைந்து திரும்பினார். அவருடைய இந்த பொறுப்புணர்வு தந்தையை மட்டுமின்றி ஊராரையும் அவர்மீது மதிப்பு கொள்ளச் செய்தது. தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல…
-
1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். பஞ்சாயத்து ரேடியோ எங்கள் வீட்டில்தான் இருக்கும். பேட்டரியில் இயங்கக்கூடியது. ஒரு ஸ்பீக்கர் வேறு கட்டியிருப்பார்கள். அண்ணா மரணமும், அதைத் தொடர்ந்து சோக இசையும் ஒலிக்கத் தொடங்கியது. ஊர் மந்தையில் பரபரப்பாகியது. அண்ணா படம் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா ஊர்களிலும் பாடையில் ஒரு உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.…
-
தேர்தல் முடிவுகளத் தீர்மானிப்பது எது? ஆட்சியில் நடந்த தவறுகளா? கூட்டணி பலமா? வலுவான கூட்டணியே பொதுவாக தேர்தலில் நடபெறும் தில்லுமுல்லுகளை தடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது எனது முடிவு. நெருக்கடி நிலை 1975 1976 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1971 மக்களவைத் தேர்தலில் அவருடைய வெற்றி செல்லாது என்றும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட…












