தென் கொரியாவில் உள்ள தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகளாவிய அளவில் முதல் திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டை ஒட்டி, பல்வேறு தலைப்புகளில் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும், கவிதைகளையும் இந்த அமைப்பு வரவேற்கிறது. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ஒரு லட்சம் கொரியா வொன் பரிசாக வழங்கப்படும். மாநாடு குறித்தும், அனுப்ப வேண்டிய கட்டுரைகள் குறித்தும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை… நாள்: நவம்பர் 8, 2025 நேரம்: மதியம் 12.30…
முனைவர் ஆரோக்கியராஜ்
-
-
சியோல், ஏப்ரல் 25, 2025- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) நடத்திய “தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள்” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நேற்று ஜூம் இணையதள வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கருத்தரங்கில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, குறிப்பாக, கனடா, ஹாங்காங், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.…
-
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்ற இரண்டு பேராசிரியர்கள் உலக அளவில் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளாக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இவர்களை, டச்சு மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப புத்தக பதிப்பகமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் தேர்வு செய்துள்ளன. ஸ்கோபஸ் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் 1 லட்சம்…
-
“தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்” தொடக்க விழா, 05/10/2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ், இன்பராஜ், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் ஞானராஜ், சியோல் பல்கலைகழக மாணவர்கள், வட இந்திய நண்பர்கள் என 30க்கும் அதிகமான கொரியா வாழ் தமிழர்கள் முன்னிலையில் “தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு-SKTRA” தொடங்கப்பட்டது. தென் கொரியா தமிழ்…








