நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடைபெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும் முழுமனதோடு பணியாற்றினர். அவர்களுக்கு…
ராதா மனோகர்
-
-
“ஆன்மிக அறிவு ஒரு பிரமிட் மோசடி“ கேள்வி கேள்.. சவால் விடு.. உண்மையை தேடல் என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆன்மிக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது. உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆன்மிக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது. சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள், இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள். இது ஒரு சௌகரியமான பொய்யான…
-
புயலில் அடிபட்ட முல்லைக்கொடி புத்தூர் நம்பியின் தலைக்கு மேல் ஏராளமான கடமைகள் சுமத்தப்பட்டிருந்தன. பார்ப்பனர்களின் சகவாசத்தில் ஒரு கோவிலாக உருமாறி போயிருந்த நேமிநாதர் சமண பள்ளியை மீண்டும் நிர்மாணிப்பது முதல் கடமையாக இருந்தது. அது பற்றி உரியவர்களோடு பலவிதமான ஆலோசனைகளில் ஈடுபட்டான். சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்களை தேடிப்பிடித்து மீண்டும் சமண பள்ளிகளில் சேர்க்கவேண்டும். இடையில் வந்த கோவில் களியாட்டங்கள் அவர்களின் மனதை திசை திருப்பி இருக்க கூடாதே என்ற…
-
பயம் எதிரி அல்ல.. விளையாட்டு மைதானம் பய உணர்வு யாருக்கு மிக அதிகம்? பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா? மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது! மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்? இந்த கருத்து உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன. மனிதர்களின் பய உணர்வுக்கும்…
-
கண்ணீரை சுமந்து வந்த வெற்றி! பாலவோரை எங்கிலும் ஒரு சகிக்க முடியாத அமைதி குடி கொண்டிருந்தது. அரசன் நிலையோ என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் மக்களுக்கு என்ன தெளிவு கிடைக்கும்? மழை ஒய்ந்து விட்டது. கோவில் கட்டுமானம் வேலைகளை புறந்தள்ளி விட்டு ஏராளமான பணியாளர்கள் அரண்மனையை செப்பனிடும் அதிசய காட்சி அரங்கேறி கொண்டிருந்தது. பணியாட்கள் அரண்மனையை செப்பனிடுகிறார்களா அல்லது குப்புற கவிழ்க்கிறார்களா என்று ஊர் மக்கள் தமக்கு பேசிக் கொண்டனர்.…
-
மரங்கள்தான் உண்மையான ஞானகுரு… அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா? நாம் வாழும் இந்த பூமியை பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா? இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது. மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது. எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை…
-
கண்ணீருக்கு கவசம் போட்ட மழைநீர் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது குலதிலகன் மெதுவாக தனிமைப் படுத்தப்படுவதாக மேனகா பிராட்டிக்கு தோன்றியது. அவன் மிக வேகமாக தோற்று கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது. எதுவிதத்திலும் ஆலோசனை கூறமுடியாத ஒரு சூழ்நிலை கைதிகளாக அவனும் தானும் இருப்பதாக எண்ணினாள். அவளின் சுயநலத்தையும் மீறி ஒரு காதல் அவளுக்குள் பூத்திருந்தது. அரசனை பார்க்கும் போதெல்லாம் இப்போது கண்ணீர் விட்டாள். சுயநலத்தால் அவனை சதா தழுவிகொண்டிருந்த…
-
கடவுளையும், மருந்தையும் விட நாமே உயர்ந்த பிராண்டுகள்! கடவுளையும் மருந்தையும் கட்டிலும் நீங்கள்தான் உயர்ந்தவர்… எனவே நிமிர்ந்து நில்லுங்கள்! நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது. `இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா? அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள். எவ்வித…
-
பெரு மழை கட்டியம் கூறிய போர் மழை புத்தூர் நம்பியின் அதீத அறிவிலும் ஆற்றலிலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருப்பது சரியானதா என்று சில வேளைகளில் அக்கையர் எண்ணுவது உண்டு. அதற்கு காரணமும் இருந்தது. காணமல் போன பார்ப்பனர்களின் விபரங்களை தேடி அயல் தேசத்து ஒற்றர்கள் உலாவ தொடங்கினர். இச்செய்தி அக்கையர் செவியில் எட்டியது. அயல்தேசங்கள் பார்ப்பனர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவது தங்கள் திட்டங்களை மேலும் சிக்கலாகும் என்ற கவலை…
-
Nothing ஐ அடைவதற்கு Things ஐ இழக்கச் சொல்லும் மோசடிதான் தியானம் மனிதகுல வரலாறுதோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது. மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம். அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது. சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான்…





